ஒட்டக்கூத்தர்




ஒட்டக்கூத்தர்-- என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.

இராசராசசோழன் உலா - மூவருலா (Rajaraja Cholan Ula - Muvarula)
குலோத்துங்க சோழன் உலா - மூவருலா (Kulothunga Cholan Ula - Muvarula)
விக்கிரமசோழன் உலா - மூவருலா (Vikrama Cholan Ula - Muvarula)
அரும்பைத் தொள்ளாயிரம்
ஈட்டி எழுபது
உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்)
எதிர் நூல்
கண்டன்கோவை
காங்கேயன் நாலாயிரக் கோவை
தக்கயாகப்பரணி
தில்லையுலா

Comments