வாழ்வினுக் கெங்கள்கண்ணன்


    கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
    கலக்க மிலாது செய்வான்; - பெருஞ்
    சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
    தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்
    ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
    உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
    ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
    இதஞ்சொல்லி மாற்றிடு வான்;

    பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
    பேச்சினி லேசொல்லு வான்;
    உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன்
    உண்ணும் வழியுரைப் பான்;
    அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
    அரைநொடிக் குள்வரு வான்;
    மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
    வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

    Comments

    Popular posts from this blog

    பறவை நாச்சியார்

    நாரையூர்

    உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்